ஓடாதீர்
ஓகோ உலகத்தீர்
ஓடாதீர்
சாகா வரம் பெற்ற
சரஸ்வதியார் அருள்பெற்ற
வன்னக் கவிராயன்
நானல்ல.
உன்னிப்பாய் கேளுங்கள்
ஓடாதீர்!
வானக் கனவுகளை
வக்கணையாச் சொல்லும்
உண்மைக் கவிராயன்
நானல்ல
சத்தியமாய் சொல்லுகிறேன்
சரஸ்வதியார் நாவினில்
வந்து நடம்புரியும்
வளமை கிடையாது!
ஓடாதீர்
----------------------------------
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று ; ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்புகட்டி
கல்லில் வடித்து
வையாதீர்;
“வானத்து அமரன்
வந்தான் காண்! வந்தது போல்
போனான் காண்" என்று
புலம்பாதீர்!
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டு விடும்
----------------------------------புதுமைப்பித்தன் கவிதைகள் - தொ.மு.சி.ரகுநாதன் NCBH வெளியீட்டு
ஓகோ உலகத்தீர்
ஓடாதீர்
சாகா வரம் பெற்ற
சரஸ்வதியார் அருள்பெற்ற
வன்னக் கவிராயன்
நானல்ல.
உன்னிப்பாய் கேளுங்கள்
ஓடாதீர்!
வானக் கனவுகளை
வக்கணையாச் சொல்லும்
உண்மைக் கவிராயன்
நானல்ல
சத்தியமாய் சொல்லுகிறேன்
சரஸ்வதியார் நாவினில்
வந்து நடம்புரியும்
வளமை கிடையாது!
ஓடாதீர்
----------------------------------
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று ; ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்புகட்டி
கல்லில் வடித்து
வையாதீர்;
“வானத்து அமரன்
வந்தான் காண்! வந்தது போல்
போனான் காண்" என்று
புலம்பாதீர்!
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டு விடும்
----------------------------------புதுமைப்பித்தன் கவிதைகள் - தொ.மு.சி.ரகுநாதன் NCBH வெளியீட்டு
0 comments:
Post a Comment